நாட்றம்பள்ளி அருகே கனரக வாகனம் மீது கார் மோதி விபத்து

நாட்றம்பள்ளி அருகே கனரக வாகனம் மீது  கார் மோதி விபத்து
X

கார் மோதி விபத்து


நாட்டறம்பள்ளி அருகே அதிக வேகமாகச் சென்ற கார் சென்டர் மீடியம் மற்றும் கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் சந்திப்பு சாலை அருகே வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியைச் சேர்ந்த நிரஞ்சலட்சுமி மற்றும் அவருடைய மகன் சந்தோஷ் ஆகிய இருவரும் காட்பாடி பகுதியில் இருந்து பெங்களூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சந்தோஷ் காரை ஓட்டி சென்று கொண்டிருந்தார்

அப்போது பச்சூர் டோல்கேட் அருகே சென்று கொண்டிருந்தபோது தேசிய நெடுஞ்சாலையில் இருந்த சென்டர் மீடியத்தின் மீது மோதி முன்னாள் சென்று கொண்டிருந்த கண்டைனர் லாரி மீது மோதி கார் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதில் நிரஞ்சலட்சுமி பலத்த காயம் அடைந்தார்

பின்னர் இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நிரஞ்சலட்சுமியை மீட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் காரை ஓட்டி வந்த சந்தோஷ் லேசான காய மட்டுமே ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story