கார் லாரி மீது மோதி விபத்து – காவல்துறை விசாரணை

கார் லாரி மீது மோதி விபத்து – காவல்துறை விசாரணை
விபத்து
விழுப்புரம் மாவட்டம் , விக்கிரவாண்டி அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் குழந்தைகள் உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்தவர் சங்கர் சீனிவாசன் (வயது 40) இவரது மனைவி கீர்த்திகா (36). இருவரும் டாக்டர் ஆவர். சங்கர் சீனிவாசன் தனது மனைவி கீர்த்திகா, மகன்பர் வேஸ் ஐயன் (13), மகள் மதுஸ்ரீ சமா (10) ஆகியோருடன் சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். காரை டாக்டர் சங்கர் சீனிவாசன் ஓட்டினார். விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டு அருகில் சென்றபோது, முன்னால் சென்ற லாரி திடீரென பழுதாகி சாலையில் நின்றதாக தெரிகிறது.

இதில் கண் இமைக்கும் நேரத்தில் கார் எதிர்பாராதவிதமாக அந்த லாரி மீது மோதியது. இதில் கார் பலத்த சேதமடைந்தது. மேலும் விபத்தில் சங்கர் சீனிவாசன் உள்பட 4 பேரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story