அம்பத்தூரில் தறிகெட்டு ஓடிய கார் - விபத்தின் சிசிடிவி காட்சி

அம்பத்தூரில் தறிகெட்டு ஓடிய கார் - விபத்தின் சிசிடிவி காட்சி

விபத்தின் சிசிடிவி காட்சிகள்

அம்பத்தூரில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மற்றும் சைக்கிளில் சென்றவர் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்பத்தூரில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மற்றும் சைக்கிளில் சென்றவர் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து அம்பத்தூர் போக்குவரத்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இதுகுறித்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சென்னை, அம்பத்தூர் அடுத்த கள்ளிக்குப்பத்தைச் சேர்ந்தவர் சந்திரன். இவர் தனது மனைவியுடன் காரில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீதும், எதிரே சைக்கிளில் வந்த மாநகராட்சி ஊழியர் மீதும் மோதி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், கார் ஓட்டியவரின் மனைவி மற்றும் சைக்கிளில் வந்த நபருக்குக் காயமடைந்துள்ளது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் போக்குவரத்து போலீசார், சாலை நடுவில் தலைகீழாக கவிழ்ந்து கிடந்த காரை அப்புறப்படுத்தினர். மேலும், விபத்தில் கார் ஓட்டியவரின் மனைவிக்குக் கழுத்து, வாயில் காயம் மற்றும் சைக்கிளில் வந்தவருக்கு இடது கை தோல் பட்டை எலும்பு முறிந்த நிலையில் இருவரையும் மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, விபத்து குறித்து அம்பத்தூர் போக்குவரத்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படாமல் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். தற்போது, இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story