டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து !

டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து !

 வழக்கு பதிவு 

டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து. கணவன் மனைவி படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.
டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து. கணவன் மனைவி படுகாயம்.காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, கருப்பூர் அருகே உள்ள கோரக்குத்தி பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி வயது 36. இவரது மனைவி கவிதா வயது 30. இவர்கள் இருவரும் மார்ச் 16ஆம் தேதி காலை 9.30 மணி அளவில், திருச்சி - கரூர் சாலையில் அவர்களது டூவீலரில் சென்று கொண்டிருந்தனர் டூவீலரை பார்த்தசாரதி ஓட்டிச் சென்றார். இவர்களது வாகனம் கேபி குளம் அருகே சென்றபோது, அதே சாலையில், திருப்பூர் மாவட்டம், அண்ணா நகர், தொட்டிபாளையம் அருகே உள்ள செந்தில் நகர் பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி என்பவர் வேகமாக ஓட்டி வந்த டாடா ஏஸ் வாகனம், பார்த்தசாரதி ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்த பார்த்தசாரதி மற்றும் கவிதாவுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக இருவரையும் மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூரிலுள்ள ராஜ் ஆர்த்தோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பார்த்தசாரதி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சரக்கு வாகனத்தை வேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய முத்துச்சாமி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் மாயனூர் காவல்துறையினர்.

Tags

Next Story