தீப்பிடித்து எரிந்த பால்பாக்கெட் ஏற்றி வந்த சரக்கு வாகனம்

தீப்பிடித்து எரிந்த பால்பாக்கெட் ஏற்றி வந்த சரக்கு வாகனம்

உசிலம்பட்டி அருகே பால்பாப்கெட் ஏற்றி வந்த சரக்கு வாகனம் திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்தது.


உசிலம்பட்டி அருகே பால்பாப்கெட் ஏற்றி வந்த சரக்கு வாகனம் திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்தது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மதுரை தேனி எல்லையான ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் கம்பத்தில் பால் பாக்கெட்டுகளை இறக்கிவிட்டு மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு வாகனம் நடுரோட்டில் திடீரென தீபிடித்து எரிந்தது.மளமளவென வாகனத்தின் முன் பகுதி தீப்பிடித்து எரிந்ததால் புகை மண்டலமாக மாறியது, அவ்வழியாக சென்ற வாகனங்களும் அச்சத்தோடு கடந்து செல்லாமல் தவித்த நிலையில் தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்புத்துறை வீரர்கள், சரக்கு வாகனத்தில் எரிந்து கொண்டிருந்த தீயை போராடி அணைத்தனர். வாகனத்தை இயக்கி வந்த மதுரையைச் சேர்ந்த சரவணக்குமார் என்பவர் சாதூர்தியமாக இறங்கி ஓடிய சூழலில் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

Tags

Next Story