சேலத்தில் நிலத்தகராறில் இளம்பெண்ணை தாக்கிய 6பேர் மீது வழக்கு

சேலத்தில் நிலத்தகராறில் இளம்பெண்ணை தாக்கிய 6பேர் மீது வழக்கு

கோப்பு படம் 

சேலத்தில் நிலத்தகராறில் இளம்பெண்ணை தாக்கிய 6பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் டவுன் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி கீர்த்தி (28). சதீஷின் தந்தைக்கு இரண்டு மனைவிகள். சதீஷிற்கும் அவரது தந்தைக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் கீர்த்தியும் சதீஷூம் வீட்டில் இருந்தனர்.

அப்போது அங்கு வந்த சதீஷின் உறவினர்களான அல்லிக்குட்டையை சேர்ந்த சிவகாமி, தாதகாப்பட்டி மகாலட்சுமி, மைதிலி, கோவிந்தராஜ், சுந்தரமூர்த்தி, பழனிசாமி ஆகியோர் அவர்களிடம் தகராறு செய்தனர். அப்போது தகராறு முற்றிய நிலையில் அவர்கள் கீர்த்தியை தாக்கினர்.

இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுபற்றிய புகாரின் பேரில் டவுன் போலீசார் சிவகாமி, மகாலட்சுமி, மைதிலி, கோவிந்தராஜ், சுந்தரமூர்த்தி, பழனிசாமி ஆகிய 6பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story