வாணியம்பாடி அருகே பாறைக்கு வெடிவைத்தவர் மீது வழக்கு

வாணியம்பாடி அருகே குடியிருப்பு பகுதி அருகே பாறைக்கு வெடிவைத்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்ட்டம் வாணியம்பாடி அடுத்த பெத்தகல்லுப்பள்ளி பகுதியில் தனியாருக்கு சொந்தமான வீட்டு மனைபிரிவுகள் உள்ளன, இந்த வீட்டுமனைபிரிவில் அதிக அளவு பாறைகள் உள்ளதால் வீட்டு மனையை வாங்கி நபர்கள் அப்பகுதியில் பாறைகளை அப்புறப்படுத்த வெடி பொருட்களை பயன்படுத்தி உள்ளனர்.. இதனால் வெடி பொருட்களை பயன்படுத்தும் பொழுது அதிக அளவு சத்தத்துடன் அதிர்வு ஏற்பட்டதாக அக்கம்பக்கத்தினர்.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர்.. பின்னர் இதுகுறித்து பெத்தகல்லுப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் வெடி பொருட்கள் பயன்படுத்தியது குறித்து விசாரணை மேற்க்கொண்ட போது வீட்டுமனையை வாங்கி நபர்கள் வாணியம்பாடி கோட்டாச்சியரின் உரிய அனுமதி பெறாமல் பாறைகளை அப்புறப்படுத்த வெடி பொருட்கள் பயன்படுத்தியது தெரியவந்தது.

பின்னர் இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் அரசு அதிகாரிகளின் உரிய அனுமதி பெறாமல் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே வெடி பொருட்கள் பயன்படுத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.. புகாரின் பேரில் வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் இந்நிகழ்வு குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்...

Tags

Next Story