சிறுமியை கற்பமாக்கியவர் மீது வழக்கு

சிறுமியை கற்பமாக்கியவர் மீது வழக்கு

சிறுமியை கற்பமாக்கியவர் மீது வழக்கு

சிறுமியை கற்பமாக்கியவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே ஏனாதி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த அவரது உறவினரான 16 வயது சிறுமி கடந்த 1 ஆண்டாக அவரது வீட்டில் தங்கி அவரை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் மூதாட்டியின் மகனான கலைமேகம் என்பவர் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் தாக்குதல் நடத்தியதுடன் அவரை 30.10.22 ஆம் தேதி திருமணம் செய்துள்ளார்‌. இந்நிலையில் அவர் தற்போது 8 மாதம் கற்பமாக உள்ள நிலையில் மானாமதுரை அனைத்து மகளிர் போலீசார் கலைமேகம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story