திருமண மண்டபத்தில் தகராறு செய்தவர் மீது வழக்கு

திருமண மண்டபத்தில் தகராறு செய்தவர் மீது வழக்கு

ராஜா

திருக்கோவிலுார் அடுத்த சந்தப்பேட்டை, திருமண மண்டபத்தில் நேற்று காலை விழா நடந்து முடிந்த நிலையில், திருமணத்துக்கு வந்திருந்த சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த திருவேங்கடம் என்பவரின் மகன் ராஜா, 47; அவரது அண்ணன் சிவகுமார், 50; இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனை விலக்க சென்ற திருக்கோவிலுார், சந்தப்பேட்டையைச் சேர்ந்த பாஸ்கரை ராஜா பிளேடால் கழுத்தில் கிழித்து விட்டார்.இதில் காயம் அடைந்த பாஸ்கரனை திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் ராஜா மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story