கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர்கள் மீது வழக்குப்பதிவு !

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர்கள் மீது வழக்குப்பதிவு !

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர்கள் மீது வழக்குப்பதிவு !

குடிக்க பணம் தர மறுத்துவரை தாக்கி செல்போன் பணம் பறித்து சென்றவர்கள் மீது வழக்குப்பதிவு.
கோவை:போத்தனூர் ஜிடி.டேங்க் பகுதியில் வசித்து வரும் முகமது ஷெரீபின் மகன் முகமது ஹூசைன்(30).தியாகி குமரன் மார்கெட் பகுதியில் உள்ள காய்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார்.சம்பவத்தன்று குறிச்சி குளக்கரை வழியாக தனது நண்பர் சுப்ரமணியத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்ததார்.அப்போது முகமது ஹூசைனுக்கு தெரிந்த நபர்களான குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த முஜீபுர் ரகுமான்,முகமது ஆஷிக்,சாதிக் மற்றும் சுதீர்,ஹக்கீம் ஆகியோர் வாகனத்தை நிறுத்தி மது அருந்த பணம் தர கேட்டுள்ளனர்.தன்னிடம் பணம் இல்லை என முகமது ஹூசைன் கூறிய நிலையில் கத்தியை காட்டி மிரட்டி அவரை தாக்கியதுடன் 3500 ரூபாய் பணத்தை எடுத்ததுடன் செல்போன் பறித்து Google pay மூலம் தங்களது கணக்கிற்கு 9800 பணத்தை மாற்றிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இதுகுறித்து முகமது ஹூசைன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள குனியமுத்தூர் ஐந்து பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story