சாலை மறியலில் ஈடுபட்ட 14 பேர் மீது வழக்கு பதிவு

சாலை மறியலில் ஈடுபட்ட 14 பேர் மீது வழக்கு பதிவு

சாலை மறியல் 

செய்யாறு அருகே குடிசைகளை அகற்ற வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே அனக்காவூர் இந்திரா நகரில் சர்வே எண் 311ல் வசந்தி, வனிதா, சக்தி ஆகியோர் குடிசை அமைத்து பட்டா கேட்டு விண்ணப்பம் செய்து உள்ளதாக கூறி அந்த குடிசைகளை அகற்ற வலியுறுத்தி சாலை மறியல் செய்த சம்பவத்தில் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த சித்ரா,ராதா, தனுஷ், உதயகுமார் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது,அனக்காவூர் எஸ்ஐ கன்னியப்பன் தலைமையிலான போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்

Tags

Next Story