ஆண்டிபட்டி கண்டமனூர் அருகே 2 பேர் மீது வழக்கு பதிவு

ஆண்டிபட்டி கண்டமனூர் அருகே 2 பேர் மீது வழக்கு பதிவு

காவல் நிலையம்

ஆண்டிபட்டி கண்டமனூர் அருகே பெண்ணை தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கண்டமனூர் அருகே மீனாட்சிபுரம் பகுதியில் முனியம்மாள் என்பவர் கால்நடைக்கு சீமை புல் நடவு செய்துள்ளார். இதனை மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பழனிவேல் என்பவர் அறுத்துவிட்டதாக கூறி முனியம்மாள் அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு பழனிவேல் மற்றும் அவரது உறவினர்கள் இரண்டு பேர் சேர்ந்து முனியம்மாளை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து கண்டனூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story