சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசுகள் பதுக்கிய நபர் மீது வழக்கு பதிவு....

சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசுகள் பதுக்கிய நபர் மீது வழக்கு பதிவு....

 சட்டவிரோதமாக பட்டாசுகள்

சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசுகள் பதுக்கிய நபர் மீது வழக்கு பதிவு.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரம் பகுதியில் சிவகாசி டவுன் கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் தனது கிராம உதவியாளருடன் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.அப்போது அந்தப் பகுதியில் ஒரு குழாய் கடையில் சோதனை செய்தபோது முழுமை அடையாத வெடிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சோதனையில் திரியுடன் கூடிய முழுமை அடையாத நிலையில் 15 சாட் குழாய்கள் 200 எண்ணம் , முழுமையடையாத 7 கட்டு திரிகள் சட்டவிரோதமாக பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல் செய்தனர்.இது குறித்து சிவகாசி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் குழாய் கடையின் உரிமையாளர் பாஸ்கர் மகன் சங்கர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story