17 வயது சிறுமிக்கு திருமணம் – இளைஞர் மீது வழக்குபதிவு

17 வயது சிறுமிக்கு திருமணம் – இளைஞர் மீது வழக்குபதிவு

17 வயது சிறுமிக்கு திருமணம் 

விருதுநகர் மாவட்டம், பழைய வெள்ளையாபுரம் 17 வயது சிறுமியை திருமணம் முடித்த 20 வயது இளைஞர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் சமூக நல விரிவாக்க அலுவலராக வேலை பார்ப்பவர் ராஜேஸ்வரி இவர் கடந்த மூன்றாம் தேதி 17 வயது சிறுமிக்கு திருமணம் முடிப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. சிவகாசி பகுதியில் உள்ள பழைய வெள்ளையாபுரம் பகுதிக்குச் சென்ற அவர் அங்கு 20 வயதுடைய பாலமுருகன் என்பவர் 17 வயது சிறுமிக்கு தாலி கட்டியது தெரியவந்தது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க திருத்தங்கல் காவல் நிலையத்தில் ராஜேஸ்வரி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story