உரிமமின்றி பட்டாசு விற்ற வாலிபர் மீது வழக்கு பதிவு

உரிமமின்றி பட்டாசு விற்ற வாலிபர் மீது வழக்கு பதிவு

பட்டாசு விற்பனை - கைது 

கள்ளக்குறிச்சி பகுதியில் தீபாவளி பண்டிகையொட்டி உரிமத்துடன் பட்டாசு விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார், பட்டாசு விற்பனை தொடர்பாக நகர பகுதியில் நேற்று முன்தினம் மாலை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்த கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் சாலையைச் சேர்ந்த கார்த்தி, 24; என்பவர் மீது வழக்குப் பதிந்து அவரிடமிருந்து 8 பட்டாசு பாக்ஸ்களை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story