முதியவரை தாக்கிய விவசாயி மீது வழக்கு பதிவு !

முதியவரை தாக்கிய விவசாயி மீது வழக்கு பதிவு !

வழக்குப் பதிவு

கோணம்பட்டி கிராமத்தில் நிலத்தகராறில் முதியவரை கட்டையால் தாக்கிய விவசாயி மீது மாரண்டஅள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட மாரண்டஅள்ளி அடுத்த கோணம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை இவருக்கு வயது 70 இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த விவசாயியான ரங்கதுரை என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக நிலத்தகராறு இருந்து வந்தது. இந்த நிலை யில் அண்ணாமலை தனது மாந்தோப்பில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த போது அங்கு வந்த ரங்கதுரை, அண்ணாமலையிடம் தகராறில் ஈடுபட்டு அருகே கிடந்த கட்டையால் தாக்கியதில் அண்ணாமலை பலத்த காயமடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story