ஊத்தங்கரை அருகே கார் கண்ணாடி உடைத்தவர் மீது வழக்கு

ஊத்தங்கரை அருகே கார் கண்ணாடி உடைத்தவர் மீது வழக்கு

காவல் நிலையம் 

ஊத்தங்கரை அருகே கொடுத்த கடன் வராததால் ஆத்திரத்தில் கார் கண்ணாடி உடைத்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த மிட்டப்பள்ளி அருகே உள்ள சாம கவுண்டன் வலசையைச் சேர்ந்தவர் குணசேகரன் இவருடைய மனைவி சாந்தி வயது 50. இவர் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஊத்தங்கரை அடுத்த உப்பாரப்பட்டியை சேர்ந்த பன்னீர்செல்வம் வயது 46 என்பவரிடம் 10 லட்சம் ரூபாய் கடன் பெற்று திருப்பூரில் தொழில் தொடங்கியுள்ளார்.

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக வாங்கிய கடனை அவரால் செலுத்த முடியவில்லை இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி பன்னீர்செல்வம் சாமகவுண்டன்வலசை சென்று சாந்தியிடம் பணம் கேட்டுள்ளார் சாந்தி வாய்தா கேட்டுள்ளார்.

இதனால் கோபமடைந்த பன்னீர்செல்வம் அருகில் இருந்த கார் மற்றும் டூவீலரை தடியால் அடித்து சேதப்படுத்தி உள்ளார் இது குறித்து சாந்தி நேற்று சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

Tags

Read MoreRead Less
Next Story