தேர்தல் விதிகளை மீறியதால் பாமகவினர் மீது வழக்குபதிவு

தேர்தல் விதிகளை மீறியதால் பாமகவினர் மீது வழக்குபதிவு

வழக்கு

கள்ளக்குறிச்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி ஊர்வலம் சென்றதாக பாமக நிர்வாகிகள் 300 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர்.

கள்ளக்குறிச்சி, மந்தைவெளியில் பா.ம.க., வேட்பாளர் தேவதாசை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக கள்ளக்குறிச்சிக்கு வந்த பா.ம.க., தலைவர் அன்புமணியை வரவேற்க நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று, பட்டாசு வெடித்தனர்.

அனுமதி பெறாமல், தேர்தல் விதிமுறைகளை மீறி ஊர்வலமாக சென்றதாகவும், பொதுக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்ததாகவும் பா.ம.க., மாவட்ட செயலாளர் தமிழரசன், நகர செயலாளர் பிரபு, ஒன்றிய செயலாளர் ராஜா உட்பட 300 பேர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்தனர்.

Tags

Next Story