கத்தியை காட்டி மிரட்டிய மருமகன் மீது வழக்கு பதிவு

மது போதையில் மாமியாரை தாக்கி கத்தியை காட்டி மிரட்டல் விடுத்த மருமகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மது போதையில் மாமியாரை தாக்கி கத்தியை காட்டி மிரட்டல் விடுத்த மருமகன் மீது வழக்கு பதிவு. காவல்துறை நடவடிக்கை. கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா டி.இடையப்பட்டி அருகே உள்ள அனையூர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யாவு கோனார் மனைவி சூடாமணி வயது 65. இவர் மே 6ஆம் தேதி தான் வளர்த்து வந்த ஆடுகளை, இரவு 8 மணி அளவில் தனது வீட்டில் பராமரிப்பு செய்து கொண்டிருந்தார். அப்போது, மது போதையில் அங்கு வந்த சூடாமணியின் மருமகன் அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் வயது 37 என்பவர், தன்னிச்சையாக தனது மாமியார் சூடாமணியை தகாத வார்த்தை பேசி, கைகளால் தாக்கி, பின்னர் அருவாளை காட்டி மிரட்டல் விடுத்து, துன்புறுத்தி உள்ளார். இந்த சம்பவம் குறித்து சூடாமணி காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில்,சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், மது போதையில் தன்னிச்சையாக தகராறு செய்த முருகேசன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் பாலவிடுதி காவல்துறையினர்.

Tags

Read MoreRead Less
Next Story