விவசாயியை தாக்கிய வாலிபர் மீது வழக்கு பதிவு

விவசாயியை தாக்கிய வாலிபர் மீது வழக்கு பதிவு

காவல்துறை விசாரணை

விவசாயியை தாக்கிய வாலிபர் மீது வழக்கு பதிவு
தியாகதுருகம் அருகே மாடு மேய்த்த தகராறில் விவசாயியை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். தியாகதுருகம் அடுத்த பிரிதிவிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜூனன், 61; விவசாயி. இவர் தனது மாடுகளை உறவினர் சாந்தமூர்த்தியின் வயலில் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த வேலாயுதம் மகன் முகுந்தகுமார், 23; என்பவர் தனது வயலின் வரப்பில் மாடுகளை மேய்ப்பதாக கூறி அர்ஜூனனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்த புகாரின்படி தியாகதுருகம் போலீசார், முகுந்தகுமார் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

Tags

Next Story