முன் விரோதம் காரணமாக கத்தியால் குத்திய இளைஞர் மீது வழக்கு பதிவு !

முன் விரோதம் காரணமாக கத்தியால் குத்திய இளைஞர் மீது வழக்கு பதிவு  !

வழக்கு பதிவு

முன் விரோதம் காரணமாக தகாத வார்த்தை பேசி, கத்தியால் குத்திய இளைஞர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முன் விரோதம் காரணமாக தகாத வார்த்தை பேசி, கத்தியால் குத்திய இளைஞர் மீது வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, வீரணம்பட்டி அருகே உள்ள மாலைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி வயது 47. இவர் அப்பகுதியில் விவசாயி ஆக பணியாற்றி வருகிறார். கடந்த பொங்கல் திருநாளன்று, அதே பகுதியை சேர்ந்த ராசு மகன் சிவகுமாருக்கும் சுப்பிரமணிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இருதரப்பினர் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், மார்ச் 25ஆம் தேதி மாலை 5 மணி அளவில், மாலைப்பட்டி வாட்டர் டேங்க் அருகே குடிநீரை பிடித்துக் கொண்டு இருந்தார் சுப்பிரமணி. அப்போது, அங்கு வந்த சிவகுமார், பழைய சம்பவத்தை மனதில் வைத்துக் கொண்டு, கொலை செய்யும் நோக்கோடு, தகாத வார்த்தை பேசி, தான் வைத்திருந்த கத்தியை எடுத்து சுப்பிரமணியின் வயிற்றில் குத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த சுப்பிரமணியை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சுப்பிரமணி அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக சிவகுமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் சிந்தாமணிப்பட்டி காவல்துறையினர்.

Tags

Next Story