ராணுவ வீரருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது வழக்கு பதிவு

ராணுவ வீரருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது வழக்கு பதிவு

மாரண்டஅள்ளி அருகே, வழிப்பாதை தகராறில் ராணுவ வீரர் மீது தாக்குதல் நடத்திய 3 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


மாரண்டஅள்ளி அருகே, வழிப்பாதை தகராறில் ராணுவ வீரர் மீது தாக்குதல் நடத்திய 3 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாரண்டஅள்ளி அருகே சீரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பூபால் ராணுவத்தில் பணியாற்றி வரும் இவர், விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர், பூபால் வீட்டிற்க்கு செல்லும் வழியில் டிராக்டரரை நிறுத்தி வைத்திருந்தார். இதனால், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தாக கூறி, பூபால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால், டிராக்டரை எடுக்காததால் மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

இதனால் ஆத் திரமடைந்த ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவி தீபா, உறவினர் முத்துலட்சுமி ஆகியோர் பூபாலை தகாத வார்த்தையால் திட்டி உள்ளனர். மேலும், கற்களை வீசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.தாக்குதலில் காயமடைந்த பூபால், பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். மேலும், இன்று மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில், ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவி உள்பட 3 பேர் மீது காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story