கோழி கடை ஊழியரை தாக்கிய இருவர் மீது வழக்கு பதிவு.

கோழி கடை ஊழியரை தாக்கிய இருவர் மீது வழக்கு பதிவு.

காவல்துறை விசாரணை

மார்த்தாண்டத்தில் கோழி கடை ஊழியர் மீது தாக்குதல்.இரண்டு பேர் மீது வழக்கு பதிவு.
மார்த்தாண்டம் ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் ராஜு. அவரது மகன் ஆகாஷ்.இவர் மார்த்தாண்டத்தில் உள்ள கோழிக்கடையில் வேலைபார்த்து வருகிறார்.அதிகாலை ஆகாஷ் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.மார்த்தாண்டம் காந்தி மைதானம் அருகே வந்து கொண்டிருந்தபோது கிள்ளியூர் சடையன் குழி பகுதியை சேர்ந்த அபி ஷாந்த் மற்றும் விரிகோடு முண்டவிளையை சேர்ந்த வினித் ஆகியோர் அந்த வழியாக வந்தனர். அவர்கள் இருவரும் ஆகாஷை திடீரென வழிமறித்தனர். பின்னர் இருவரும் சேர்ந்து கம்பால் ஆகாஷை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் ஆகாஷ் புகார் அளித்தார். இதன் பேரில் ஆகாஷை தாக் கிய அபிஷாந்த் மற்றும் வினித் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story