மாணவியரை சீரழித்த நதியாவிற்கு 'குண்டாஸ்'

மாணவியரை சீரழித்த நதியாவிற்கு குண்டாஸ்

நதியா

பள்ளி மாணவிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நதியா மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தேனாம்பேட்டை டாக்டர் தாமஸ் சாலையைச் சேர்ந்தவர் நதியா, 39. இவர், தன் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் வாயிலாக, பள்ளி மாணவியரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தார். தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கும், நட்சத்திர ஓட்டல்கள், தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் பள்ளி மாணவியரை அனுப்பி பாலியல் தொழில் நடத்தி வந்தார்.

இது குறித்து குழந்தைகள் நல அதிகாரிகள், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். விசாரித்த போலீசார் நதியா உட்பட ஒன்பது பேரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர். அவர்களில், நதியா மற்றும் அவரது கூட்டாளிகள், தி.நகர் ராமச்சந்திரன், 42, மாய ஒலி, 29, தண்டபாணி, 36 ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் உத்தரவிட்டார். அதன்படி நேற்று நால்வரும் கைது செய்யப்பட்டனர்.

Tags

Next Story