வியாபாரியை கார் ஏற்றி கொலை செய்த வழக்கு - மேலும் ஒருவர் கைது

வியாபாரியை கார் ஏற்றி கொலை செய்த வழக்கு - மேலும் ஒருவர் கைது

வேம்படிதுரை

திருச்செந்தூா் அருகே வன்னிமாநகரம் வள்ளிவிளையில் வியாபாரியை காா் ஏற்றிக் கொலை செய்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்செந்தூா் அருகே வன்னிமாநகரத்தைச் சோ்ந்த ஜெயபாண்டி என்பவரின் மகன் வேம்படிதுரை(40). சேலத்தில் மளிகை கடை நடத்தி வந்தார். கடந்த 5ஆம்தேதி உறவினா் துக்க நிகழ்ச்சிக்காக சொந்த ஊரான வன்னிமாநகரத்துக்கு வந்த அவரை மா்ம நபா்கள் காரை ஏற்றிக் கொலை செய்தனா். இதுகுறித்து திருச்செந்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். விசாரணையில் வன்னிமாநகரத்தில் உள்ள கோயில் கொடைவிழாவில் ஏற்பட்ட பிரச்னையில் கடந்த 2016ஆம் ஆண்டு விவசாயி சிவகுரு என்ற சிவலட்சம் என்பவா் கொலை செய்யப்பட்டாா். அந்தக் கொலை வழக்கில் வேம்படிதுரை உள்பட சிலா் கைது செய்யப்பட்டு, அது சம்பந்தமான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் சிவகுரு கொலைக்கு பழிக்கு பழியாக வேம்படி துரை கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இவ்வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் முத்துகுமாா் என்பவரை போலீஸாா் கைது செய்தனா். இந்நிலையில் சிவகுருவின் உறவினா்கள் சுதாகா், சொா்ணகோபி ஆகியோா் திருநெல்வேலி நீதிமன்றத்தில் சரணடைந்தனா். மேலும் இக்கொலையில் தொடா்புடையதாகக் கூறப்படும் முக்கிய நபரான சிவராஜை போலீஸாா் நேற்று கைது செய்தனா்.
Next Story