வீடு புகுந்து தொழிலாளி மீது தாக்குதல் உறவினர் மீது வழக்கு பதிவு

வீடு புகுந்து தொழிலாளி மீது தாக்குதல் உறவினர் மீது வழக்கு பதிவு

காவல்துறை விசாரணை


கொல்லங்கோடு அருகே வீடு புகுந்து தொழிலாளியை தாக்கிய உறவினர் மீது போலீசார் வழக்கு பதிவு.
கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர், தச்சாணி என்ற பகுதியை சேர்ந்தவர் மணி (60). இவர் தொழிலாளி. இவரது தம்பியை இவரது அண்ணன் மகன் ரோய் (35) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாக்கியுள்ளார். இதை மணி தட்டி கேட்டுள்ளார்.இதில் இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவ தினம் இரவு மணி தனது வீட்டின் முன்னால் நின்று கொண்டிருந்த போது, காம்பவுண்டர்குள் அத்துமறி நுழைந்த ரோய், மணியின் பின் தலையில் தாக்கி காயப்படுத்தி விட்டு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சென்றுள்ளார்.இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த மணி குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது சம்பந்தமாக கொல்லங்கோடு போலீசார் ராய் மீது இன்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story