சேலம் அருகே சிறுமியுடன் குடும்பம் நடத்தியவர் மீது வழக்கு

X
வழக்கு
சேலம் அருகே சிறுமியுடன் குடும்பம் நடத்தியவர் மீது வழக்கு. போலீசார் நடவடிக்கை.
சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 23). கூலி தொழிலாளி. இவர், 15 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வரவே விக்னேஷ் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கொங்கணாபுரம் முருகன் கோவிலுக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தினார். சிறுமி தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளார். சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் சங்ககிரி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி விக்னேஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Next Story