திருச்சியில் சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய வாகன டிரைவர் மீது வழக்கு பாய்ந்தது

திருச்சியில் சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய வாகன டிரைவர் மீது வழக்கு பாய்ந்தது

வழக்கு பதிவு

போக்குவரத்து விதிமுறைகளை மீறி சென்றதாக வழக்கு பதிவு செய்த, சப்-இன்ஸ்பெக்டரை தகாத வார்த்தையால் திட்டியதாக டிரைவர் மீது வழக்கு பதிவு
திருச்சி அரியமங்கலம் போக்குவரத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஐயப்பன் டி.வி.எஸ்.டோல்கேட் ரவுண்டானா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு டாட்டா ஏசி வாகனம் ஒன்று அந்தப் பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி சென்றதாக கூறப்படுகிறது. உடனே, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஐயப்பன் அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி வழக்கு பதிவு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாகனத்தின் டிரைவர் வசந்த், சப்-இன்ஸ்பெக்டரை தகாத வார்த்தையால் திட்டி, அரசு பணியை செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி கே.கே.நகர் போலீசில் ஐயப்பன் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அபிராமி, வசந்த் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story