காருக்கு வழிவிடாமல் தடுத்துநிறுத்தி தகராறு மூன்றுபேர் மீது வழக்கு

காருக்கு வழிவிடாமல் தடுத்துநிறுத்தி தகராறு மூன்றுபேர் மீது வழக்கு

வழக்கு பதிவு

மயிலாடுதுறை அருகே எலந்தங்குடியில் இரவில் பள்ளிவாசலிலிருந்து சென்று திரும்பிய நபரது காருக்கு வழிவிடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்ட மூன்று பேர் மீது பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
மயிலாடுதுறைஅருகே எலந்தங்குடி ரயிலடி தெருவை சேர்ந்தவர் நஜ்முதீன் மகன் அப்துல் ரியாஸ் (28) இவர் சம்பவ தினத்தன்று இரவு தனது காரில் எலந்தங்குடி பள்ளிவாசல் சென்று திரும்பி உள்ளார் எலந்தங்குடி ரயில் நிலைய பகுதி சாலையில் வந்தபோது மூன்றுபேர் நின்று கொண்டு இவரது காருக்கு வழிவிடாமல் தகராறு செய்தனர் இவர் அவர்களைப்பார்த்து திட்டி விட்டு ஓரமாக காரை எடுத்துச்சென்றுவிட்டார் . இதில் ஆத்திரம் அடைந்த எலந்தங்குடி அப்துல் ஜாஃபர் மகன் சர்புதீன் (58) அப்துல் ஜாஃபர் மகன் (50) ஹாரிஸ் மகன் ஜமால் முகமது ஆகிய மூவரும் அப்துல் ரியாஸ் வீட்டுக்கு சென்று அவரைத் திட்டி அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து அப்துல் ரியாஸ் பெரம்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சர்புதீன், ஆரிப் மற்றும் ஜமால் முகமது ஆகிய 3பேர்மீது வழக்கு பதிவு செய்து இருவரை கைது செய்தனர்.

Tags

Next Story