சிவகாசியில் சகதிக்காடாக காட்சியளிக்கும் தொழிற்பேட்டை

சிவகாசியில் சகதிக்காடாக காட்சியளிக்கும் தொழிற்பேட்டை
சகதிக்காடாக காட்சியளிக்கும் அவல நிலை
சிவகாசி தொழிற்பேட்டையில் சகதிக்காடாக காட்சியளிக்கும் அவல நிலையில் உள்ளது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி ரிசர்வ்லயனில் கூட்டுறவு தொழிற்பேட்டையில் சுமார் 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.தமிழகம் மற்றும் வடமாநிலங்களை சேர்ந்த 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு இங்கிருந்துதான் புத்தகங்கள் மற்றும் பிரிண்டிங் பேப்பர்கள், பேப்பர் கப்,பிளாஸ்டிக் பை தயாரிப்பு,பேகேசிங் போன்ற பல்வேறு தொழில்கள் இந்த தொழிற்பேட்டையில் இயங்கி வருகின்றன.வர்த்தகப் பகுதியாக திகழும் இந்த தொழிற்பேட்டையில் போதிய சாலை,குடிநீர்,மின் விளக்கு,மருத்துவ வசதிகள்,பல பகுதிகள் சாலை வசதியின்றி மண்மேடு மற்றும் சகதிக்காடாகவும் காட்சியளிக்கும் அவல நிலை.

மழை காலங்களில் தொழிற்பேட்டை சாலையை பயன்படுத்தவே முடியாத நிலையிலுள்ளன.இதனால் தொழில் நிறுவனங்களுக்கு பொருட்கள் ஏற்றி வரும் கனரக வாகனங்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்ற அவல நிலையால் வேலைக்கு வரும் தொழிலாளர்களின் வாகனங்கள் அடிக்கடி பழுது ஏற்படுகின்றது.

மேலும் தொழிற்பேட்டைக்கு என தனியாக அதிகாரிகள், அலுவலர்கள் பணியிலிருந்த போதிலும் தொழிற்பேட்டை அலங்கோலமாக உள்ளது.தொழிற்பேட்டைக்குள் சாலை வசதி உட்பட அனைத்து வசதிகள் உடனடியாக செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags

Next Story