ரூ.5 லட்சத்திற்கான காசோலை

கள்ளக்குறிச்சியில் தாட்கோ மூலமாக வேளாண் நிலம் வாங்கும் திட்டத்தின் கீழ், பயனாளி ஒருவருக்கு ரூ.5 இலட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
இன்று (27.12.2023) கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளிலுள்ள தூய்மை பணியாளர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய மாநில அரசின் திட்டங்கள், சலுகைகள் மற்றும் இதர கோரிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் (Safai Karmacharis) தலைவர் எம்.வெங்கடேசன் தாட்கோ மூலமாக வேளாண் நிலம் வாங்கும் திட்டத்தின்கீழ் பயனாளி ஒருவருக்கு ரூ.5 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங்மீனா ஆகியோர் உள்ளனர்.

Tags

Next Story