தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

முக்கூர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்ததால், அப்பகுதி மக்கள் சோகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.  

முக்கூர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்ததால், அப்பகுதி மக்கள் சோகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
முக்கூரில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த குழந்தை தரை மட்ட தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பலி, செய்யாறு போலீசார் விசாரணை. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே முக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி சிப்காட் ஊழியர்.இவரது மனைவி ஜெயந்தி ,மகள் ஜீவிதா (7),மகன் மகேஸ்வரன் (4) ஆகியோருடன் வசித்து வருகிறார் . வழக்கம் போல முனியாண்டி சிப்காட் பணிக்கு சென்று விட்டார். இவரது மனைவி மாடு மேய்க்க சென்று விட்டார். குழந்தைகள் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மகேஸ்வரன் (4) தரை மட்ட தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து தத்தளித்து கொண்டிருந்தார்,அருகில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு செய்யாறு அரசு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்து பார்த்த போது குழந்தை மகேஸ்வரன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து செய்யாறு போலீசில் புகார் செய்ததின் பேரில் செய்யாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story