தென்னை மரத்தில் இடி விழுந்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு.

தென்னை மரத்தில் இடி விழுந்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு.

இடி விழுந்து எரியும் தென்னை மரம்

ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென இடி மின்னல் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் தென்னை மரத்தில் இடி விழுந்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிங்கராயபுரம் கிராமத்தில் அதிக அளவு மழை இல்லை என்றாலும் கடுமையான இடி மின்னல் காற்று இருந்துள்ளது. அப்போது திடீரென ஒரு மின்னல் கீற்று அங்குள்ள தேவாலயத்தின் அருகில் இருந்த தென்னை மரத்தின் மீது விழுந்துள்ளது. இதனை அடுத்து அந்த தென்னை மரத்தின் உச்சியில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. அருகில் வீடுகள் இல்லாததாலும் லேசான மழை பெய்ததாலும் சிறிது நேரம் தீ எரிந்து விட்டு தானாகவே நின்று விட்டது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில் திடீரென இடி இடித்து தென்னை மரம் தீப்பிடித்து இருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

Tags

Next Story