பெண்ணை தர குறைவாக பேசிய 3 பேர் மீது காவல் நிலையத்தில் புகார்

பெண்ணை தர குறைவாக பேசிய 3 பேர் மீது  காவல் நிலையத்தில் புகார்
காவல் நிலையம் 
விருதுநகர் வீரராமன் தெருவை சார்ந்தவர் குருவத்தாய். இவருடைய மகன் மணிப்பாண்டி அதே பகுதியைச் சார்ந்த சரவணன் என்பவரின் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் தந்தை சரவணன் மற்றும் அவருடைய நண்பர்களான மாரிக்கனி மற்றொரு சரவணன் ஆகிய மூவரும் குருவத்தாயை தரகுறைவாக பேசி கொலை மிரட்டல் பிடித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து குருவத்தாயி அளித்த புகார் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story