தி.மு.க.நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்

தி.மு.க.நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்

கலைஞரின் நூற்றாண்டு விழா குறித்து ஆத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க.நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் செம்பட்டியில் நடைபெற்றது.


கலைஞரின் நூற்றாண்டு விழா குறித்து ஆத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க.நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் செம்பட்டியில் நடைபெற்றது.

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பாக முன்னாள் முதல்வரும், முத்தமிழறிஞருமான டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் ஜீன் 3 ஆம் தேதி நடைபெற உள்ள பிறந்தநாள் விழா கொண்டாடுவது குறித்து ஆத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க.நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் செம்பட்டியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆத்தூர் மேற்கு ஒன்றிய அவைத்தலைவரும், ஒன்றிய குழு உறுப்பினருமான காணிக்கைசாமி தலைமைதாங்கினார்.

ஆத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பாறைப்பட்டி ராமன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க துணைச் செயலாளர் மார்கிரேட் மேரி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாஸ்கரன், மாவட்ட இளைஞரணி துணைஅமைப்பாளர் மணலூர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் நெல்லூர் மலைச்சாமி, மேற்கு ஒன்றிய பொருளாளர் தேவரப்பன்பட்டி போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Tags

Next Story