நெல்லை கோட்ட இந்து முன்னணி பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம்

நெல்லை கோட்ட இந்து முன்னணி பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்

மார்த்தாண்டத்தில் இந்து முன்னணி நெல்லை கோட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்து முன்னணி நெல்லை கோட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் மார்த்தாண்டம் அனஸ்வரா பவுண்டேஷனில் வைத்து நடைபெற்றது. நெல்லை மாவட்ட கோட்ட தலைவர் தங்க மனோகர் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் ஆர். கே கண்ணன், ஆறுமுகசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, மாநில பொதுச் செயலாளர் டாக்டர் அரசு ராஜா, மாநிலத் துணைத் தலைவர் ஜெயக்குமார், மாநில செயலாளர் குற்றாலநாதன், சக்திவேலன் மற்றும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அனஸ்வரா பவுண்டேசன் தலைவர் ஜெயசீலன் நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கீழ்கண்ட தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டது. இந்து முன்னணி அரசியல் கட்சி அல்ல, எங்களது அமைப்பு தேர்தலில் போட்டியிடாது. இந்துக்களின் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிகளுக்கு எங்களது ஆதரவு உண்டு, அந்த வகையில் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சிக்கு இந்து முன்னணி ஆதரவளிக்கும், இந்துக்கள் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும், மோடி அவர்கள் உலகின் குருவாக இந்தியாவை மாற்றிக் கொண்டிருக்கிறார். நாடு வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,

Tags

Next Story