பணிகளை புறக்கணித்து தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் அனைத்து பணிகளையும் புறக்கணித்து தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது
தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு துணை வட்டாட்சியர் பட்டியலில் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணி இறக்க பாதுகாப்பு அரசாணையை வெளியிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாம் கட்ட போராட்டம் இன்று துவங்கியது இந்த இரண்டாம் கட்ட போராட்டத்தில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலக சங்கத்தினர் அனைத்து பணிகளையும் புறக்கணித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story