தொடர் ஜோதி ஓட்டம்

தொடர் ஜோதி ஓட்டம்

சங்கரன்கோவிலில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக தொடர் ஜோதி ஓட்டம் நடைபெற்றது.


சங்கரன்கோவிலில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக தொடர் ஜோதி ஓட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகிலுள்ள குருவிகுளத்தில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 134 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தொடர் ஜோதி ஓட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சி சங்கரன்கோவில் துவங்கப்பட்டது. சங்கரன்கோவில் கக்கன் நகரில் அமைந்துள்ள புரட்சியாளர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் எல்லாளன் தலைமையில் மாலை அணிவித்து தொடர் ஜோதி ஓட்டத்தை துவக்கி வைத்தார். இந்த தொடர் ஜோதி ஓட்டம் சங்கரன்கோவிலில் இருந்து புறப்பட்டு குருவிகுளம் சென்றடைந்தது. இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தை கட்சியின் மண்டல துணைச் செயலாளர் குழந்தை வள்ளுவன், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் லிங்கவளவன், குருவிகுளம் கார்த்திக், இளங்கோவன், தங்கம்,முருகன், கனகராஜ், துர்க்கையம்மன், சுரேஷ் உள்ளிட்ட ஏராளமான விடுதலை சிறுத்தை கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story