வாடகை காரை அடமானம் வைத்த தம்பதி

வாடகை காரை அடமானம் வைத்த தம்பதி

பைல் படம் 

சேலம் அழகாபுரம் அருகே நண்பரிடம் வாடகைக்கு வாங்கிய காரை அடமானம் வைத்த தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சேலம் அழகாபுரம் அத்வைத ஆசிரம ரோட்டை சேர்ந்தவர் ரகமத்துல்லா (65). இவரும் சூரமங்கலம் ரயில் நகரை சேர்ந்த சுப்பிரமணி ஆகியோரும் நண்பர்கள். ரகமத்துல்லாவின் காரை சுப்பிரமணி வாடகைக்கு வாங்கியிருந்தார். மீண்டும் அவர் காரை கேட்டபோது சுப்பிரமணி சென்னையில் காரை அடமானம் வைத்திருப்பது தெரிந்தது. இது பற்றி அவரிடம் விசாரித்த போது ரகமத்துல்லாவை சுப்பிரமணி மிரட்டியுள்ளார். இதுகுறித்து அவர் அழகாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சுப்பிரமணி மற்றும் அவரது மனைவி அன்பரசி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags

Next Story