ரயிலில் அடிபட்டு பசு மாடு பலி

ரயிலில் அடிபட்டு பசு மாடு பலி

ரயிலில் அடிபட்டு பசு மாடு பலி

திண்டுக்கல் மாவட்டம் ; ரயில் தண்டவாளத்தில் பசுமாடு மீது மோதிய பழனி முருகன் எக்ஸ்பிரஸ் ரயில். பசுமாடு உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு தினமும் மாலை 7மணிக்கு பழனி முருகன் எக்ஸ்பிரஸ் ரயில் செல்கிறது. பாலக்காட்டில் இருந்து பழனி மார்க்கமாக சென்னை செல்லும் விரைவு ரயில் நேற்றிரவு பழனி ரயில்நிலையம் அருகே சென்றபோது கோதைமங்களம் ரயில்வே கேட் அருகில், பசுமாடு ஒன்று ரயில் தண்டவாளத்தில் நின்றவாறு மேய்ந்து கொண்டிருந்தது. ரயில் வருவதை கவனிக்காமல் நின்றிருந்த பசுமாடு மீது ரயில் மோதியதில் பசுமாடு உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டு ரயில் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த பசுமாட்டை அகற்றினர். விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story