கிணற்றில் விழுந்த பசு மாடு - உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்

கிணற்றில் விழுந்த பசு மாடு -  உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்

மீட்கும் பணி

உத்திரமேரூர் அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.
"காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த, சிறுங்கோழி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தர்மன் என்பவரது பசு, நேற்று, காலை 9:20 மணிக்கு அவருக்கு சொந்தமான நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது, விவசாய நிலத்தில் இருந்த ஆழமான விவசாய கிணற்றில் பசு தவறி விழுந்தது. கிணற்றில் இருந்து வெளியேற முடியாமல் தவித்த பசு, கத்தியபடியே இருந்தது. அருகில் இருந்தவர்கள் உத்திரமேரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, உத்திரமேரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெகதீசன் தலைமையிலான, தீயணைப்பு மற்றும்மீட்புபடை வீரர்கள்,கிணற்றில் இறங்கி, கிராமத்தினர் உதவியுடன், கயிறு வாயிலாக பசுவை உயிருடன் மீட்டனர்.

Tags

Next Story