கும்மிடிப்பூண்டி அருகே கிணற்றில் விழுந்த பசுமாட்டை உயிருடன் மீட்பு

கும்மிடிப்பூண்டி அருகே கிணற்றில் விழுந்த பசுமாட்டை உயிருடன் மீட்பு

மாட்டை மீட்ட இளைஞர்கள்

கும்மிடிப்பூண்டி அருகே மேய்ந்து கொண்டு இருந்த பசு மாடு தவறி கிணற்றில் விழுந்ததை அருகில் இருந்த இளைஞர்கள் பத்திரமாக மீட்டனர்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பாதிரிவேடு காவல் நிலையம் முன்பு விவசாய பம்ப் செட் கிணற்றின் அருகில் மேய்ந்து கொண்டிருந்த பார்த்திபன் என்பவருக்கு சொந்தமான பசுமாடுகளில் ஒன்று தவறி பம்ப் செட் கிணற்றில் விழுந்தது.

இதனை பார்த்த சுப்பிரமணி என்பவர் கிணற்றுக்குள் இறங்கி அருகில் இருந்தவர்களின் உதவியுடன் பசு மாட்டை கயிறு கட்டி சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பின்பு மீட்டனர், பின்னர் சுப்பிரமணி மேலே வர முடியாமல் தவித்த போது இளைஞர்கள் அவரையும் கயிறு கட்டி பத்திரமாக மேலே கொண்டு வந்தனர்.

கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய பசுவை பத்திரமாக மீட்ட இளைஞர்களை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

Tags

Next Story