கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

கிணற்றில் விழுந்த பசுமாடு  உயிருடன் மீட்பு

மீட்பு பணி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த புதூர் புங்கனை ஊராட்சிக்கு உட்பட்ட முருக்கந்தாள் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுரங்கம். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இவரது மாடு மேய்ந்துகொண்டிருந்தது. அப்போது எதிர்ப்பாராத விதமாக தடுமாறி மாடு கிணற்றில் விழுந்தது. உடனடியாக ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு பணியை நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த நிலையை அலுவலர் ராமமூர்த்தி தலைமையிலான குழுவினர் 20 அடி ஆழமுள்ள கிணற்றில் உயிருக்கு போராடி இருந்த பசு மாட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை வீரர்கள் உயிருடன் பத்திரமாக மீட்டனர் மாட்டின் உரிமையாளர் பொன்னுரங்கம் மற்றும் அவரது உறவினர்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

Tags

Next Story