நாட்டு வெடி வெடித்து பசு மாடு காயம் - போலீசார் விசாரணை

நாட்டு வெடி வெடித்து பசு மாடு காயம் - போலீசார் விசாரணை

காயமடைந்த பசு மாடு

ஆம்பூர் அருகே மேய்ச்சலுக்கு விடப்பட்டியிருந்த பசு மாடு நாட்டு வெடி வெடித்து வாய் தாடை கிழிந்து படுகாயம் அடைந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ராளகொத்தூர் பகுதியில் ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அதே பகுதியை சேர்ந்தமஞ்சுளா என்பவருக்கு சொந்தமான பசு மாடு மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்தது திடிரென்று மேய்ந்து கொண்டிருந்தபசுமாடு நாட்டு வெடி வெடித்து வாய்தாடை கிழிந்து படுகாயம் அடைந்தது உமராபாத் போலீசார் கூறுகையில் யாரோ சமூக விரோதிகள் பன்றிகளை வேட்டையாட நாட்டு வெடி வைத்திருக்கலாம் என்று பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story