குற்றாலம் அருவிகளில் அலைமோதும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம்

குற்றாலம் அருவிகளில் அலைமோதும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம்

அலைமோதிய கூட்டம் 

குற்றால அருவியில் குளிக்க ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை இல்லாததால் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் தண்ணீர் வரத்தும் சற்று குறைய தொடங்கியுள்ளது. ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றால அருவிகளில் மிதமாக விழும் தண்ணீரில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகளை காட்டிலும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.

சபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்து வரும் நிலையில் தென்காசி மாவட்டம் வழியாக செல்லும் ஐயப்ப பக்தர்கள் பலரும் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் புனித நீராடி குற்றாலநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்து சபரிமலைக்கு செல்லும் வழக்கத்தை கொண்டிருப்பதால் அருவிகளில் குளிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இன்று காலையில் குற்றாலம் மெயின் அருவியில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் குளித்தனர்.

Tags

Next Story