மாட்டின் காலில் வெட்டு: போலீசார் விசாரணை.

மாட்டின் காலில் வெட்டு: போலீசார் விசாரணை.

காயமடைந்த மாடு

மஞ்சுவிரட்டு போட்டிகளில் கலந்து கொண்ட மாட்டின் காலில் வெட்டு.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த கோட்டைச்சேரி பகுதியில் சிவா என்பவர் காளைமாடு வளர்த்து வருகிறார் இந்த காளைமாடு ஆந்திர மற்றும் தமிழகத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளது மேலும் சமீபத்தில் ஆந்திராவில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் கலந்துகொண்டு முதல் பரிசு வென்றதாக கூறப்படுகிறது இதனிடையே வீட்டின் அருகே மாட்டு கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டிருந்த காளை மாட்டின் காலில் மர்ம நபர்கள் கத்தியால் வெட்டியதில் மாட்டுக்கு பலத்த காயம் ஏற்படுள்ளது இதனையடுத்து மாட்டின் உரிமையாளர் இதுகுறித்து பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த பேரணாம்பட்டு காவல் துறையினர் காளை மாட்டின் காலில் வெட்டிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர் மஞ்சுவிரட்டு போட்டியில் கலந்துகொண்டு பல்வேறு பரிசுகளை பெற்ற காளை மாட்டின் காலில் கத்தியால் வெட்டிய சம்பவம் மாட்டின் உரிமையாளர்களிடையே சோகத்தையும் அப்பகுதியில் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது

Tags

Next Story