கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு

மான் உயிருடன் மீட்பு

கள்ளகுறிச்சி மாவட்டம், சொரையப்பட்டு பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த மானை தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டனர்.
திருக்கோவிலூர் அருகே சொரையப்பட்டு கிராமத்துக்குள் இன்று புள்ளிமான் ஒன்று வந்தது. அங்கு எதிா்பாராத விதமாக 30 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்தது. அப்போது, அந்த வழியாகச் சென்ற விவசாயிகள் இதைப் பாா்த்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். உடனடியாக திருக்கோவிலூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மானை உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

Tags

Next Story