தூத்துக்குடி அருகே வேன் மோதி பக்தர் ஒருவர் பலி!

தூத்துக்குடி அருகே வேன் மோதி பக்தர் ஒருவர் பலி!

கோப்பு படம் 

தூத்துக்குடி அருகே வேன் மோதி பாதயாத்திரை பக்தர் ஒருவர் உயிரிழந்தார். 

தூத்துக்குடி அருகே வேன் மோதி பாதயாத்திரை பக்தர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். விருதுநகர் மாவட்டம், நல்ல மருதம்பட்டி கிராமத்தை சேர்ந்த செந்தில்வேல் (40), ராமமூர்த்தி (43) ஆகிய இருவரும் பாதயாத்திரை ஆக திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.

தூத்துக்குடி - மதுரை நெடுஞ்சாலை ரோடு வாலசமுத்திரம் அருகில் நடந்து வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த ஒரு வேன் இவர்கள் இருவர் மீதும் மோதியது. இதில் செந்தில்வேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பலத்த காயம் அடந்த ராமமூர்த்தி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் வழக்குப் பதிந்து, வேன் டிரைவரான வேப்பலோடை பாண்டியபுரத்தை சேர்ந்த முத்துமாலை மகன் அரிச்சந்திரன் (35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story