தென்காசியில் மஞ்சுவிரட்டு போன்று வித்தியாசமான விளையாட்டு

தென்காசியில் மஞ்சுவிரட்டு போன்று வித்தியாசமான விளையாட்டு
புளியங்குடியில் மஞ்சுவிரட்டைப் போன்ற வித்தியாசமான விளையாட்டு
தென்காசியில் மஞ்சுவிரட்டைப் போன்ற வித்தியாசமான விளையாட்டு நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் புளியங்குடி அடுத்த புன்னையாபுரம் பகுதியில் வசிக்கும் விவசாயிகள், தங்களின் விவசாயத்திற்கு உற்ற துணையாக இருக்கும் மாடுகளை குளிப்பாட்டி, அவற்றின் தொழுவத்தை சுத்தம் செய்து, மாடுகளுக்கு சந்தனம், குங்குமம் போன்றவை இட்டு அலங்கரித்தனர்.

பின்னர் பொங்கல் வைத்து, அவற்றை தெய்வங்களுக்குப் படையலிட்டு, மாடுகளுக்கு கொடுத்து வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து, புன்னையாபுரம் கிராமத்தில் இருக்கும் திடலுக்கு, கிராம மக்கள் அனைவரும் தங்களது மாடுகளைக் கொண்டு வந்தனர். இவ்வாறு சுமார் 100க்கும் மேற்பட்ட காளைகள் திரட்டப்பட்டிருந்தது.

பின்னர், இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வேகமாகச் செல்ல, அவர்களை காளைகள் விரட்டிச் செல்லும், மஞ்சுவிரட்டைப் போன்ற விளையாட்டு நடைபெற்றது. இந்த விளையாட்டை ஊர் மக்கள் அனைவரும் கூடி நின்று வேடிக்கை பார்த்து மகிழ்ந்தனர்.

Tags

Next Story