பைக் விபத்தில் மாற்றுத்திறனாளி வாலிபர் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரை குளம் அருகே உள்ள குமார பெருமாள்விளயை சேர்ந்தவர் அலெக்ஸ் நவமணி மகன் தியோடர். வாய் பேச, காது சரியாக கேட்கவும் முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். ஆண்டி விளை - கீழமனக்குடி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சித்தன் குடியிருப்பு பகுதியில் வைத்து பைக் நிலை தடுமாறி தியோடர் கீழே விழுந்துள்ளார்.
இதில் படுகாயம் அடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தியோடர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதை அடுத்து அவரது தாயார் ஜெசிந்தா தென்தாமரைக்களம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
